சனத் ஜெயசூர்யாவை மண் கவ்வ வைத்த முன்னாள் புலி உறுப்பினர்கள். (படங்கள் இணைப்பு)

மாத்றைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் அணிக்கும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றுள்ளது.


இந்த போட்டி இன்று முற்பகல் 10 மணியளவில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அமைசர்கள் அணி 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 64 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய முன்னாள் போராளிகள் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 64 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அமைச்சர்களின் அணிக்கு சனத் ஜயசூரிய தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|