அழியாக் காதலின் அடையாளமாகக் கட்டப்பட்ட தாஜ்மஹால் ஒழுங்காக கவனிக்கப்படாவிடின் 5 வருடத்தில் உடைந்து விழும் அபாயம்…!!!

சரியாகக் கவனிக்கப்படாவிடில் தாஜ்மஹால் இன்னும் 5 வருடங்களில் உடைந்து வீழ்ந்து விடுமென சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன் அஸ்திவாரம் சிதைவடைந்து வருவதாகவும் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாஜ்மஹாலின் தூபிகளும் உடைந்து விழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மொகலாயப் பேரரசினால் நிர்மாணிக்கப்பட்ட தாஜ்மஹால் 358 வருடங்கள் பழமை வாய்ந்தது.

காதலின் சின்னமாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும் இது திகழுகின்றது.

வருடாந்தம் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்வையிட இந்தியாவிற்கு வருகின்றனர்.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|