நடிகருடன் தொடர்பு: நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை

பெங்களூரு, செப்.12: கன்னட நடிகருடன் தொடர்பு கொண்டிருந்ததால், அவரது குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற காரணம் காட்டி நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை விதித்துள்ளனர்.

கன்னட நடிகர் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமியை தாக்கியதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
நடிகை நிகிதாவுடனான தொடர்பால்தான் தர்ஷன் தன்னை அடித்துக் கொடுமைப் படுத்துகிறார் என்று விஜயலட்சுமி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தர்ஷனின் குடும்பப் பிரச்சினைக்கு காரணமான நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிப்பதற்கு தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நடிகை நிகிதா கன்னடப் படம் எதிலும் நடிக்கக்கூடாது, அதேபோல அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|