பொது நிகழ்ச்சிகளுக்கு போக முடியவில்லை: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்

ரசிகர்கள் தொல்லையால் ஐஸ்வர்யாராய் விரக்தி அடைந்துள்ளார். கர்ப்பமான பின் அவரை வெளியில் அதிகம் காணமுடியவில்லை. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்காக டாக்டர்களை சந்திப்பது, அவர்கள் ஆலோசனைப்படி உணவு எடுத்துக் கொள்வது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது என்று இருக்கிறார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முக்கியஸ்தர்கள் விரும்பி அழைத்ததால் சென்றார். அங்கு அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். கூட்டத்தினர் மத்தியில் சிக்கி தவித்தார். போலீசார் மீட்டனர். இதனால் திருப்தியாக சாமி கும்பிட முடியாமல் கோபத்தோடு வீட்டுக்கு திரும்பினார்.

இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-

ரசிகர்கள் நடவடிக்கைகளால் சந்தோஷப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று புரியவில்லை. நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|