சுனாமி அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களுக்காக நாளை திங்கட்கிழமை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேர மௌனப் பிரார்த்தனையினை பொதுமக்கள் அனைவரும் மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுள்ளது. நாடளாவியரீதியில் அனர்த்தங்களின் போது உயிரிழந்தவர்களுக்காக நாளை இரண்டு நிமிட நேரம் பிரார்த்தனை செய்யப்படவுள்ளது.
எனவே இந்தப் பிரார்த்தனையில் யாழ். மாவட்டத்திலுள்ள சகல மக்களையும் பங்கெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தியும், அலுவலகங்களில் பணிபுரிவோர் தமது பணிகளை இந்த இரண்டு நிமிடத்திலும் நிறுத்திவிட்டு, எழுந்து நின்று மௌனப் பிரார்த்தனையில் பங்கெடுத்து ஆழிப் பேரலை அனர்த்தங்களின் போது உயிரிழந்தோரை நினைவுகூருமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment