நிர்கதியாய் நிற்கின்றோம் – காங்கிரஸ் (பின்னி எடுத்த polimer tv )

ஞாயிறு தோறும் பாலிமர் டிவியில் இரவு 9 மணிக்கு மக்களுக்காக என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் யாரவது ஒரு அரசியல்வாதியை பேட்டி (பின்னி) எடுப்பார்கள். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு (பச்சாதாபம்) எல்லாம் கிடையாது. போன வாரம் (18-09-2011) அன்று பேட்டிகொடுக்க வந்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஞானசேகரன் (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்). மெதுவாக சிரிசிகிட்டே ஆரம்பிச்ச பேட்டி கொஞ்ச நேரத்துல சூடாகியது. அவர் கொடுத்த பேட்டியில நினைவில் நிற்பது மட்டும்.


அந்த தொகுதியில நின்னா தோற்றுவிடுவோம் னு தெரிஞ்ச பிறகும் ஏன் நின்னீங்க?

அப்படி இல்ல, நிக்க மாட்டேன்னு சொன்ன பயந்து போய் ஒதுங்கிட்டதா சொல்லுவாங்க. போரில் போரிட சென்ற பிறகு வெற்றி அல்லது தோல்வி இரண்டில் ஒன்றை பார்க்கத்தான் வேண்டும். (போர் ….. அதுவும் நீங்க?)

தங்கபாலுவை இந்த தேர்தலுக்கு முன்னாடியாவது மாத்தி இருக்கலாமே? (எரியற தீயில் எண்ணைய ஊற்றும் கேள்வி)

இல்ல இப்ப மாத்தினா உள்ளாட்சி தேர்தல்ல தோற்றுவிட்டால் (?) மீண்டும் புது தலைவரை போட சொல்லுவாங்க. அதனால மொத்தமா போட்டுக்கலாம்னு அவரையே தொடர்ந்து தலைவராக ஏற்றுக்கொண்டு வழி நடப்போம்.

சட்ட மன்ற தேர்தல் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்று சொல்லும் நீங்கள் ஏன் தி மு க வோடு கூட்டணியை தொடர்ந்தீர்கள்?

மேல் இடத்திற்கு எடுத்து சொன்னோம். ஆனால் (அன்னை சோனியா காந்தி) அவர்கள் செய்யும் முடிவே இறுதியானது என்பதால் வேறு வழி இல்லாம போய்விட்டது. (தொண்டனின் எண்ணத்தை கேட்காத கட்சி எல்லாம் ஒரு கட்சியா?)

இந்த தருணத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி என்பது தற்கொலைக்கு சமமான முடிவு என்பது போல தோன்றுகின்றதே?

நீங்க என்னங்க, நாங்களே தனியா நிக்க முடிவு பண்ணி வெளிய வந்தா மாதிரி சொல்லறீங்க? அவரே (கலைஞர்) கூட்டனினு சொன்னார், அப்புறம் அவரே இல்லன்னு சொல்லிட்டார். வேறு வழி இல்லாம நிர்கதியாய் நிற்கின்றோம், தே மு தி க வந்தால், அல்லது யாராவது கூட்டனி குறித்து பேச வந்தால் நிச்சயம் கூட்டனி அமைத்து போட்டியிடுவோம் (பா ஜா கா கூட பேசி பாருங்க சார்). தனியா நின்னா கூட நல்லது தான். சீட் கேட்டு அடிக்கடி சண்டை போடற எல்லாருக்கும் தேர்தல்ல நிக்க வாய்ப்பு கொடுக்க இதுதான் சரியான தருணம்.

(அம்மா வாங்க, அய்யா வாங்க, என் போதைக்கு நீங்க தான் ஊறுகாய்)

போர் குற்றம் செய்ததாக சொல்லப்படும் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததன் காரணம் என்ன?

(வாய் ரொம்ப நேரம் ரோலிங் ஆச்சு என்ன என்னவோ சம்பந்தம் சம்மந்தம் இல்லாம பேசிட்டு) அது நமது பண்பாடு. வந்திருப்பது எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களிடம் நாகரீகமாகத்தான் நடந்துகொள்ள முடியும்.

சர்ச்சையில் சிக்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கூப்பிட அப்படி என்ன அவசியம்?

கடைசி வரைக்கும் பதில் வரல.

ராஜீவ் கொலை வழக்கில் அவர்கள் மூவரை (சாந்தன் முருகன் பேரறிவாளன்) அவசரமாக (விசாரணை கமிசன் அறிக்கை வரும் முன்பு) தூக்கில் போட சொல்வதின் காரணம் என்ன ?

விசாரணை கமிசனுக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கும் தொடர்பு எதுவும் இல்லை. ஆதலால் அது வெளி வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. (அப்புறம் எப்பவும் போல ரோலிங்)

பாலிமர் டிவி பார்க்கற வழக்கம் இல்லனா கூட சண்டே மட்டும் இரவு 9 மணிக்கு பாருங்கள்.

நன்றி: தமிழன் வலை பூ

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|