எங்கள் தேசத்தின் நேசத்தின் பிரபாகரமே

பிறர் வாழ உன் இனம் வாழ 
பிறப்பெடுத்த தலைவா
பிரளயம் போல் சுனாமி சதிப்போர் வந்து 
உங்கள் சரித்திரத்தை கெஞ்சம் சோகமாக்கிவிட்டதே
சோதனையின் பின் தான் வெற்றி 
தோல்வி இன்றி வெற்றியில்லை
ஆனாலும் எங்களுக்கு வந்த சோகம் 
உங்கள் தலைமேலா விழவேண்டும்!
 
 
60 வருடம் அழிந்தோம் 
பிரபல வருடம் தொடக்கம் அஷ்ய வருடம் வரை 
60 ஆண்டு வந்தபின் மீண்டும்  பிரபல வருடம் ஆரம்பமாகும் 
மாதங்கள் போல பூமி சுற்றுவதுபோல 
மீண்டும் எமக்கு ஒரு காலம்  வருமா! 
கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போய்விட்டதே
கைக்கெட்டியது வாய்கெட்டவில்லையே!
 
நடத்ததை நினைத்து திருந்தா தமிழன்
பணத்துக்காக தன் வாழ்வுக்காக கேடரிக்காம்பாய் வாழ்கின்றான்
மீண்டும் யேசுவருவாரா காந்தி வருவாரே தெரியாது
எமது மீட்பர் நீங்கள் பிரகாசமாக  வருவீர்கள்
உங்கள் குரலை தான் மக்கள் நம்பியுள்ளார்கள்
எங்கிருந்தோ ஒரு குரல்வந்தது  என்று கூறும்படி ஒரு குரல்வராதா!
 
காலம் மாறிவிட்டது எழுந்தவன் விழப்போகிறான்
மத்திய கிழக்கை ஆண்டவர் பலர் அழிந்து போகிறார்கள் 
மறைந்த சூரியன் எமது விடிவிற்காய் எழப்போகிறான்
இதுவிதியின் சக்கரம் எமக்கும் ஒரு சக்கரமுண்டு
எமது கண்கள் சிவக்கின்றன வானம் வெளிக்கின்றது
வைகறை வருகிறது  வருவான் வடிவேலன்
எம் நம்பிக்கையே நீங்கள் தான்   
அமைதிவழி அரசியல் வழி போகின்றோம்
தமிழர் முடிவும் விடிவும் உங்கள் கையிலே!
 
2012 ல் பூமி அதிரடியாக அசையத் தான் போகிறது 
இலங்கை ஆடத்தான் போகிறது
அரசபடைகள் ஓடத்தான் போகிறது
புயல் பூகம்பம், கடல் பெருக்கு அநியாயத்தின் எல்லை அழிவுதான் 
சுனாமியே நீ வருவாய் என்று நாம் நினைக்கவில்லை
வந்து எம்மை அழித்தாய் இனிவந்து அழித்து எம்மை வாழச் செய் 
நாம் இழந்ததை பெற்று தமிழன் என்ற வரலாறைப் படைக்கவேண்டும்
தலைவா வெற்றி கொள்ளலாம் 2013 ல் நாம் நின்மதியடையலாம் 
அதுவரை அமைதி காத்து 
அஞ்ஞானவாசம் செய்து போராடி வெற்றி கொள்ளலாம்!
ஆனால் ஒன்று சிங்கள ஆட்சியாளர் எதாவது தருவார்கள் என
எண்ணிக்கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் 
நிகழ்காலத்தைப்பற்றி சிந்திக்கிறார்கள் கடந்த காலம் அவர்களுக்கு புரியாதா!
 
நாம் 60 வருடம் கடந்து நிற்கிறோம், 
நடந்தது என்ன எந்த சிங்கள அரசியல்வாதிகள் 
சமத்துவம் பற்றி சிந்தித்தார்களா? அமைதி நிலைநாட்டினார்களா? 
இதை சில தமிழர் புரிந்து கொள்ளவேண்டும்
தலைவர் ஆயுதப்பிரியரல்ல?  ஆயுதம் எடுத்தது மக்களைக் காக்கத் தான்
அதனால் அரசியலில் தமிழர் உலகநாடுகளில் துணையோடு 
எமக்கான பாதுகாப்பான வாழ்வைத்தேடவேண்டும் 
எமது மண்ணில் அதை பேராடிதான் பெறமுடியும் பேசி பெறவே முடியாது
காலம் மாறும் பெறுத்திரு- மார்கழி வெள்ளமல்ல அதைவிட
பெரிய வெள்ளம் ஆட்சியாளரை மறைக்கப்போகிறது
சளி பிடித்துவிட்டது குளிரில் குழியில் விழ 
இனி சனி பிடிக்கப்போகிறது பெறுத்திருந்து பாருங்கள்!
 
தலைவா  உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தர்மம் ஜெயிக்கும் தலைவர் ஆள்வார் தமிழனை! 
உலகம் அன்று விழிக்கும் 
தமிழன் அப்போ தான் தனித்துவமாக  வாழமுடியும்
தமிழ் ஈழம் மலர்ந்தே ஆகும் அல்லது தமிழ் இனத்திற்கே கேடாகும்!
அதனால் முடிவு மாறாது உலக நாடுகள் நீதிதரட்டும் 
தமிழ்ஈழம் 196வது நாடாக மலரும்!
உங்கள் அறுவதாவது வயதே 
உங்களை சரித்திர நாயகனாக உலகம் பேசும்
இதுவரை மற்றவர் பேச்சுக்கள் 
உங்கள் இலட்சியத்தை உடைக்காது
காரணம் மக்கள் என்றும் உங்கள் பக்கமே 
 
இது தான் நீங்கள் பெறும் 57வது பிறந்தநாள் பரிசு!
உங்கள் பிறப்பை அறியாதவர்கள் சிலர் உளறுகிறார்கள்
நாம் உங்களையே நம்பியுள்ளோம்
இப்போ சிலர் உளறுவது பணத்துக்காக தன் வாழ்விற்காக தான்
பின்னர் உளறுவார்கள் உண்மை புரிந்து - பயத்தில்
அப்போ இவர்களை மன்னித்துவிடுவோம் - துரோகிகள் ஆனாலும்!
எங்கள் தேசத்தின் தமிழ் மக்களின் அன்பின் மாபெரும் தலைவரே 
நீங்கள் நலம் பெற வாழ்த்துகின்றோம்! 
விரைவில் வாருங்கள் அல்லது ஒரு குரல் கொடுங்கள்!
தமிழ் இனம் உடனே தலைநிமிர்த்தும்!


கவிஞர்:அருள் தெய்வேந்திரன் 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|