10 வயது மாணவன் ஒருவனை பெண்கள் பாடசாலையில் பயில பிரித்தானிய பாடசாலை ஒன்று அனுமதித்துள்ளது. இவ்வாறு நடைபெறுவது பிரித்தானியாவில் இதுவே முதல்தடவை என்று சொல்லப்படுகிறது. பெண்களாகப் பிறந்தவர்கள் சிலர் தம்மை ஆண்கள் என நினைப்பதும், ஆண்களாப் பிறந்த சிலர் தம்மை ஒரு பெண் என நினைப்பதும் உண்டு. இவர்கள் மதனளவில் தம்மை எதிர் பாலினர் என நினைப்பதால் தமது நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ளுகின்றனர். மேலும் சிலர் ஒரு படி மேலேசென்று சத்திர சிகிச்சை மூலம் தம்மை முழுமையாகவே ஒரு பெண்ணாகவோ இல்லை ஆணாகவோ மாற்றிவிடுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட இச் சிறுவன் நிலை சற்று மாறுபட்டதாகும்.
இச் சிறுவன் பெண்ணாக மாறாமலேயே பெண்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அக் கிராமத்திலும் பள்ளிக்கூடத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சிறுவன் ஆணாகப் பிறந்தாலும் மனதளவில் அவர் ஒரு பெண்காகவே தன்னை நினைப்பதாகவும் அதனை முழுமையாக நம்புவதாகவும் அப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் பெயரையோ இல்லை அவர் பயிலும் பள்ளிக்கூடத்தையோ பிரித்தானிய ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் 36 வயது நிரம்பிய அவரின் தாயாரிடம் ஊடகங்கள் பல கருத்துக்களைக் கேட்டுள்ளன.
கேள்விகளுக்கு பதிலளித்த தாயார் தான் பெற்றெடுத்தது ஒரு ஆணைத்தான் ஆனால் என்ன செய்யமுடியும் அவன் தன்னை ஒரு பெண்ணாக எண்ணுகிறான் என்று தெரிவித்துள்ளார். அவன் உணர்ச்சிகளுக்கும் மனப்பாங்கிற்கும் ஆசிரியர்கள் மதிப்புக்கொடுத்துள்ளனர் என தாயார் மேலும் தெரிவித்தார். ஆணாகப் பிறக்கும் ஒருவர் தன்னை ஒரு பெண்ணாக நினைப்பது ஒரு பிறவிக் கோளாறு என்பதற்கு அப்பால் அதனை நிர்ணயிப்பது ஹோர்மோன்கள் மற்றும் மரபியல் பண்புகளே என்கிறார்கள். இயற்கையாகவே இவ்வாறு குணம்படைத்தவர்களுக்கு ஆண்களுக்கே உண்டான வீரம் , மீசை முளைப்பது குறைவு, பெண்கள் மேல் ஈடுபாடு குறைவு, பயம் என்பன காணப்படும்.
மேற்குலகத்தில் இதனைச் சர்வசாதாரணமாக எடுக்கும் மக்கள், பாதிக்கப்பட்டவரை அவர்போக்கில் விட்டுப் பிடிக்கின்றனர். ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இதனை ஒரு பாவத்தின் சின்னமாகக் கருதி இல்லையேல் அவமானமாகக் கருதி மக்கள் பாதிக்கப்பட்ட நபரை ஒதுக்கிவைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி-அதிர்வு.
இச் சிறுவன் பெண்ணாக மாறாமலேயே பெண்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அக் கிராமத்திலும் பள்ளிக்கூடத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சிறுவன் ஆணாகப் பிறந்தாலும் மனதளவில் அவர் ஒரு பெண்காகவே தன்னை நினைப்பதாகவும் அதனை முழுமையாக நம்புவதாகவும் அப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் பெயரையோ இல்லை அவர் பயிலும் பள்ளிக்கூடத்தையோ பிரித்தானிய ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் 36 வயது நிரம்பிய அவரின் தாயாரிடம் ஊடகங்கள் பல கருத்துக்களைக் கேட்டுள்ளன.
கேள்விகளுக்கு பதிலளித்த தாயார் தான் பெற்றெடுத்தது ஒரு ஆணைத்தான் ஆனால் என்ன செய்யமுடியும் அவன் தன்னை ஒரு பெண்ணாக எண்ணுகிறான் என்று தெரிவித்துள்ளார். அவன் உணர்ச்சிகளுக்கும் மனப்பாங்கிற்கும் ஆசிரியர்கள் மதிப்புக்கொடுத்துள்ளனர் என தாயார் மேலும் தெரிவித்தார். ஆணாகப் பிறக்கும் ஒருவர் தன்னை ஒரு பெண்ணாக நினைப்பது ஒரு பிறவிக் கோளாறு என்பதற்கு அப்பால் அதனை நிர்ணயிப்பது ஹோர்மோன்கள் மற்றும் மரபியல் பண்புகளே என்கிறார்கள். இயற்கையாகவே இவ்வாறு குணம்படைத்தவர்களுக்கு ஆண்களுக்கே உண்டான வீரம் , மீசை முளைப்பது குறைவு, பெண்கள் மேல் ஈடுபாடு குறைவு, பயம் என்பன காணப்படும்.
மேற்குலகத்தில் இதனைச் சர்வசாதாரணமாக எடுக்கும் மக்கள், பாதிக்கப்பட்டவரை அவர்போக்கில் விட்டுப் பிடிக்கின்றனர். ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் இதனை ஒரு பாவத்தின் சின்னமாகக் கருதி இல்லையேல் அவமானமாகக் கருதி மக்கள் பாதிக்கப்பட்ட நபரை ஒதுக்கிவைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி-அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment