கேணல் கடாபி நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லிபியாவை விட்டு தப்பியோட்டம்?

கேணல் கடாபி நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லிபியாவை விட்டு தப்பியோடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் லொறிகள் நிறைய தங்கம் மற்றும் பணத்துடன் மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பாசோவுக்கே அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புர்க்கினா பாசோ வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே ஐவரி கோஸ்ட் ஆகிய 6 நாடுகளால் சூழப்பட்டது.

தென் ஆபிரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்து கடாபிக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக புர்க்கினா பாசோ அறிவித்திருந்தது.

எனினும் கடாபி லிபியாவிலேயே மறைந்துள்ளதாக வேறு சிலதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடாபியின் பாதுகாப்பு உயரதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|