குழந்தையை பாதாளத்தில் தள்ளிய தாயை கமரா காட்டிக்கொடுத்தது. (படங்கள் இணைப்பு)

பெற்ற பிள்ளையை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டியவள் தாய். ஆனால் உலகில் நடக்கும் சில விஷயங்கள் தாய் என்ற சொல்லுக்கே அவமானம் தேடித்தருபவையாக உள்ளன. அந்த வகையில் மூன்று மாத குழந்தை தனது தாயாலும் பாட்டியாலும் கொல்லப்பட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது.


56 வயதான இந்த கிழவியும் அவள் மகளும் இணைந்து மகளின் குழந்தையை தள்ளு வண்டில் ஒன்றில் வைத்து வீதியின் கீழாக செல்லும் பள்ளமான பகுதியொன்றில் வைத்து தள்ளிவிட்டனர். குழந்தை தவறுதலாக விழுந்ததாக இருக்கட்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். இந்த சம்பவத்தின் போது அருகில் யாரும் இருக்கவில்லை. ஆனால் அருகில் இருந்த கட்டிடமொன்றின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராவில் இது பதியப்பட்டிருந்தது. அவர்கள் கமராவை பார்த்தபோது அதிர்ச்சியடைந்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதை ஆதாரமாக வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|