ரஷ்ய பொலிசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பூனைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்! (படங்கள் இணைப்பு)

உலகத்துல யார் யாரயோலாம் கைது பண்றாங்க, ஆனா இங்க ஒரு பூனையை அரஸ்ட் பண்ணி ரஷ்யா போலீஸ் ஒரு மிகப்பெரும் சாதனையை செஞ்சிருக்காங்க. 

ஆம், ரஷ்யாவின் சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. அந்த பூனை செய்த தவறுதான் என்ன என்பதை கீழே பாருங்கள்..

பூனை கைதிகளிடம் வேவு பார்த்து செல்போன், பேட்டரிகளை எடுத்து சென்று தந்த குற்றத்திற்காக இந்த திருட்டு பூனை கைது செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது.

சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பூனையை கைது செய்தனர். சிறைக்குள் மேலும் என்னென்ன பொருட்கள் கடத்தி வரப்பட்டன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பிரேசில் நாட்டு சிறை ஒன்றுக்குள் சென்ற பூனையின் உடம்பில் செல்போன், பேட்டரிகள், பிளேடுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி-கதிரவன்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|