விமானத்தில் முட்டியது என்ன ? (படங்கள் இணைப்பு)

 சீன விமானம் ஒன்று வானில் 26,000 அடி உயரத்தில் பறந்தவேளை திடீரென அருகில் உள்ள விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. விடையம் என்ன என்று அறிந்து பலரும் தலையில் கையை வைக்கிறார்கள். அதிகமாக விமானிகளும் , விமானத்தில் பயணிப்பவர்கள் தாம் வானில் வேற்றுகிரக மனிதர்களின் விண்கலத்தை பார்த்ததாகக் கூறுவது வழக்கம். ஆனால் அதனை யாராலும் உறுதிசெய்ய முடியாது. ஆனால் நேற்று(11.06.2013) நடந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் சுமார் 26,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்த இந்தச் சீன விமானம் திடீரென பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. உராயும் சத்தம் பெரிதாகக் கேட்டது.

இதனையடுத்து விமானத்தை உடனே தரையிறக்க விமானி முடிவுசெய்து, அருகில் உள்ள விமானநிலையத்தோடு தொடர்புகொண்டார். அவர்களும் அனுமதி கொடுக்க விமானத்தை தரையிறக்கினார் விமானி. ஆனால் தரையிறங்கியதும் பார்த்தால் விமானத்தின் முன் பாகம் அப்படியே சளிந்து காணப்பட்டது. பாரிய உராய்வு காரணமாக இது ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. கழுகு போன்ற பறவைகள் மோதினால் இவ்வாறு உருவாகும் என பொலிசார் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அங்கே ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை. அதனால் இச் சந்தேகமும் அடிபட்டுவிட்டது. அப்படி என்றால் விமானத்தோடு மோதியது எது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது வேற்றுக் கிரக வாசிகள் பயணிக்கும் விண்கலத்தோடு மோதியதால் உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது.

இதனையடுத்து நுண்பொருள் ஆய்வாளர்கள் வரவளைக்கப்பட்டு, விமானத்தின் முன் பாகத்தை ஆராய பணிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் அரிது என்று தெரிவித்தார். இருப்பினும் எது நடைபெற்றாலும் அதில் சில தடையங்கள் சிக்குவது வழக்கம் என்று தெரிவித்த ஆய்வாளர்கள், விமானத்தில் ஏற்பட்டுள்ள உராவில் ஒட்டியுள்ள துகள்களை எடுத்து ஆராயவுள்ளார்கள். அதுவரை பொறுத்திருக்கவேண்டி உள்ளது. சில வேளைகளில் விண்ணில் இருந்த கல் இவ்விமானத்தை உராய்ந்து சென்றிருக்கலாம் ...
நன்றி-அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|