தாய்லாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 506 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் பாங்காக்கின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தாய்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக பெய்த கனமழையால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. பாங்காக் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 506 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.பாங்காக்கின் வடபகுதியில் உள்ள சில மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது. எனினும், பாங்காக்கின் மொத்த 50 மாவட்டங்களில், எட்டு மாவட்டங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment