விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளன. வட பகுதியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறும் சுவரொட்டிகள் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மட்டக்களப்பில் வீதிகளில் சென்றோருக்கு இனிப்பு வழங்கியும் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் நிகழ்த்தியும் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தமிழகத்தில் பல பகுதிகளிலும் புலிகளின் தலைவரின் பிறந்ததின நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.
இதேவேளை,”நேற்று பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிலர் சுவரொட்டிகளை ஒட்டமுனைவதாக தகவல் கிடைத்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . ஒருபோதும் அவரின் பிறந்ததின கொண்டாட்டங்கள் இங்கு இடம்பெறப்போவதில்லை. நேற்றையதினம் வழமையான ஒரு நாளாகவே இருந்தது” என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துரு சிங்க தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment